நாட்டின் 17-வது வந்தே பாரத் ரயிலை நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் 17-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் அதிவேக சொகுசு ரயில் சேவையை உறுதிப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 16 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில், டேராடூனில் இருந்து டெல்லிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விழாவில் பங்கேற்கின்றனர்.

The post நாட்டின் 17-வது வந்தே பாரத் ரயிலை நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: