சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் செல்கின்றனர்.

நாளை அங்கு நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.26 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். இன்று சிங்கப்பூர் செல்வதை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..! appeared first on Dinakaran.

Related Stories: