குறை தீர்க்கும் கூட்டத்தில் 226 மனுக்கள் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு

 

திருவாரூர், மே 23: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 226 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுக்கொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 226 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) அழகர்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குறை தீர்க்கும் கூட்டத்தில் 226 மனுக்கள் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: