வீட்டில் இருந்த நகைகள் மாயம்

 

விருதுநகர், மே 23: வீட்டில் இருந்த 3.5 பவுன் நகைகள் திருடு போன புகாரில், எலக்ட்ரீசியனிடம் விருதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்(45), இவர் கடந்த ஏப்.27ம் தேதி தனது வீட்டு அலமாரியில் 3.5 பவுன் எடையிலான மோதிரங்களை கழற்றி, வைத்தள்ளார். பின்னர் ஏப்.28ம் தேதி புதிதாக வாங்கிய ஏசி மிஷினை பொருத்தியுள்ளார். ஏசி மெக்கானிக் முத்து, அவருடன் வந்த 2 பேர், விருதுநகரை சேர்ந்த எலெக்ட்ரீஷியன், புனிதராஜ் விக்னேஷ் ஆகியோர் இந்த பணிகளை முடித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அலமாரியில் வைத்த மோதிரங்களை காணவில்லை. இதை தொடர்ந்து ஏசி மெக்கானிக், எலெக்ட்ரீஷியன்களிடம் கேட்டுள்ளார். யாரும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எலக்ட்ரீசியன் புனிதராஜ் ஆடம்பர செலவுகள் செய்வதாக, னிவாசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மேற்கு போலீசில் னிவாஸ் புகார் செய்தார். போலீசார் புனிதராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் இருந்த நகைகள் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: