முன்னாள் கவுன்சிலரின் பைக்கை திருடியவர் கைது

 

திருவில்லிபுத்தூர், மே 22: திருவில்லிபுத்தூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் பைக்கை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூர் சவுண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ்(50). இவர் திருவில்லிபுத்தூர் முன்னாள் நகர் மன்ற அதிமுக கவுன்சிலராக இருந்தவர் . வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது பைக் கடந்த 17-ம் தேதி இரவு திருடு போனது. இதுகுறித்து அங்குராஜ் அளித்த புகாரில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருவில்லிபுத்தூர் சங்கூரணி தெருவை சேர்ந்த செல்வகுமார்(22) என்பது பைக்கை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரைதிருவில்லிபுத்தூர் நகர் போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post முன்னாள் கவுன்சிலரின் பைக்கை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: