திண்டுக்கல் அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பிவி தாஸ் காலனியை சேர்ந்தவர் முருகன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் சக்திவேல் (48). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முருகன் தனது டூவீலரில் சக்திவேலை அழைத்து கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். கருப்பண்ணசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டூவீலர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: