ராஜிவ்காந்தி நினைவு தினம் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 32-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராகுல் காந்தி தனது தந்தை குறித்து டிவிட்டரில், “அப்பா, நீங்கள் என்னோடும், என்னுடைய நினைவுகளிலும் என்றென்றும் எனக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள்,” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராஜிவ் காந்தி இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன். வாக்களிக்கும் வயதைக் குறைத்தது, பஞ்சாயத்து ராஜை வலுப்படுத்தியது, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது மற்றும் நீடித்த அமைதி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் என இந்தியாவை மாற்றி அமைத்தார். அவரது நினைவுநாளில் எங்களின் அஞ்சலி” என்று அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The post ராஜிவ்காந்தி நினைவு தினம் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: