மருத்துவ பரிசோதனை

 

சிவகாசி, மே 20: சிவகாசி அருகே காளையார்குறிச்சி அருகே உள்ள பட்டாசு ஆலையில் சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவர் ராஜராஜன் தலைமையிலான குழுவினர், பட்டாசு மருந்துக் கலவை செய்யும், பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் தொழிலாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்து, தகுதிச் சான்று வழங்கினர். மேலும், பட்டாசுத் தயாரிக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை தொழிலாளர்களிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆலையின் மேலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

The post மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: