அச்சங்குளம் வெடி விபத்து கடை உரிமையாளர் கைது

 

ஏழாயிரம்பண்ணை, மே 20: ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து(40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அந்த கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. பட்டாசு கடையின் அருகே தகர செட் அமைத்து விதிகளை மீறி பேப்பர் வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இங்கு நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(32) உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(25), மகேஷ்(26) லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டாசு கடை உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்தனர்.

The post அச்சங்குளம் வெடி விபத்து கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: