ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: சட்டீஸ்கரில் நடந்த விபத்தில் சோகம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பக்கத்து ஊரில் நடந்த குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக பிக்கப் வேனில் (ஆட்களை ஏற்றிச் செல்லும் சிறிய வாகனம்) சென்றனர். குடும்ப விழாவை முடித்துக் கொண்டு, தங்களது சொந்த ஊருக்கு பிக்கப் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கர்ரா என்ற இடத்தில் எதிரே வந்த லாரியும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் பிக்கப் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்களும் அடங்குவர். தகவலறிந்த ேபாலீசார் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: சட்டீஸ்கரில் நடந்த விபத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: