திருச்சியில் வங்கி ஊழியர் மாயம்

 

தில்லைநகர்: திருச்சியில் மாயமான தனியார் வங்கி ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் டாக்கர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி (27). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஷர்மிளா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலாஜி தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஷர்மிளா உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜா வழக்கு பதிந்து காணாமல் போன பாலாஜியை தேடி வருகிறார்.

The post திருச்சியில் வங்கி ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: