அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொற்கை பஞ். தலைவர் திமுகவில் இணைந்தார்

தூத்துக்குடி, மே 12: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொற்கை பஞ்சாயத்து தலைவர் முருகேசன் திமுகவில் இணைந்தார். அப்போது சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ஆறுமுகம், ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர், பழையகாயல் கிளை செயலாளர் ஜான்சன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தொண்டரணி துணை அமைப்பாளர் முக்காணி முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொற்கை பஞ். தலைவர் திமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: