குடோனில் பட்டாசு வெடித்து மேற்கூரை சிதறல்: 2பேர் படுகாயம்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஆசிரியர் குடியிருப்பு எம்ஜிஆர் நகரில் உள்ள குடோனில் சுரேஷ்(42) என்பவர் பட்டாசு தயாரித்து வருகிறார். நேற்று சுரேசும் பணியாளர் ராஜேந்திரனும்(36) பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாலை 5.30 மணியளவில் திடீரென்று பட்டாசுகள் வெடித்து குடோன் தீப்பிடித்தது. தீ பரவியதால் குடோனின் சிமென்ட் மேற்கூரை சிதறியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.

The post குடோனில் பட்டாசு வெடித்து மேற்கூரை சிதறல்: 2பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: