அய்யம்பேட்டையில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி 113வது ஆண்டு விழா

கும்பகோணம், மே6: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் லெஷ்மி நரசிம்ம ஜெயந்தி 113வது ஆண்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டையில் லெஷ்மி நரசிம்ம ஜெயந்தி 113வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சின்ன தைக்கால் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்ம மூர்த்திக்கு அன்னதான பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இரவு நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ ஆராதனையும், பூஜையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post அய்யம்பேட்டையில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி 113வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: