இதனையடுத்து பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று, ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட சுந்தரவரதராஜர் திருதேரில் அமர தோரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தேரடி வீதியில் துவங்கிய தேரோட்டம் சின்ன நாராசம் பேட்டைத் தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, திரளான பக்தர்கள், தேரினை வடம் பிடித்து இழுத்து, ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று முழக்கத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர். விழாவில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post உத்திரமேரூரில் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.