பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் , ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த பிரவீன் என்பவர் திருப்பூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன கட்டுமான சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி ..!! appeared first on Dinakaran.