அப்போது அங்கு போதையில் இருந்த இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் இளவரசன், 4ம் ஆண்டு படிக்கும் ஹரிபிரசாத் ஆகிய இருவரும் லெனின்பிரபுவின் பைக்கை பிடித்து இழுத்து, தகாத வார்த்தையால் திட்டி, அவரது கன்னத்தில் அடித்துள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இடது கால் பாதம், வலது கையில் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக லெனின் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பேராசிரியையுடன் சினிமாவுக்கு சென்ற அரசு மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு அடி உதை: சக மாணவர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.