சென்னையில் 28ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது மடிக் கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் 28ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: