அம்மனுக்கு சாத்தப்பட்டபுடவைகள் ₹40,500க்கு ஏலம்

நாமக்கல்: நாமகிரி அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகள் ₹40500க்கு ஏலம் போனது. நாமக்கல்லில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் நாமகிரி அம்மனுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக பட்டுப்புடவைகளை காணிக்கையாக செலுத்துவார்கள். இவை பக்தர்களுக்கு ஏலத்தில் விடப்படும். நேற்று முன்தினம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் நாமகிரி அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகள் பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. கோயில் பணியாளர்கள் இந்த ஏலத்தை நடத்தினார்கள். இதில் கோயிலுக்கு வந்திருந்த பெண்கள் போட்டுக்கொண்டு புடவைகளை ஏலத்தில் வாங்கிச் சென்றனர். மொத்தம் ₹40500க்கு சேலைகள் ஏலம் போனது

The post அம்மனுக்கு சாத்தப்பட்டபுடவைகள் ₹40,500க்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: