குழந்தைகளுக்கு பரிசு

 

தொண்டி, ஏப்.24: தொண்டி பேரூர் பி.வி.பட்டிணம் தமுமுக, இஸ்லாமிய பிரசார பேரவை சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மமக மாவட்ட செயலாளர் வழக்கரிஞர் ஜிப்ரி, தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் மைதின், பரக்கத் அலி, அன்சாரி மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் மார்க்கம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஏர்கூலர் பரிசாக வழங்கப்பட்டது.

முதலாம் பரிசு ஹசன் அலி ஷாம்பு, இரண்டாம் பரிசு ஃபாசில் ஜின்னா, மூன்றாம் பரிசு முர்சலீம், நான்காம் பரிசு தஸ்லிமா, ஐந்தாம் பரிசு சாபிர் அலி ஆகியோர் பெற்றனர். போட்டியில் பங்கு பெற்ற 86 நபர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கிளை தலைவர் சலீம், தமுமுக செயலாளர் மௌலானா மமக செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் ரியாஸ் துனை தலைவர் ஷாஹுல், ஜலால் இஸ்லாமிய பிரசாரா பேரவை செயலாளர் இர்ஷாத், மாணவர் அணி அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post குழந்தைகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: