இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வடிவேலு பாணியில் கேசவன் பூங்காவை காணவில்லை, கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்ற பேனரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் உள்ள அவரது இடத்தில் வைத்துள்ளார். இந்த பேனரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மைதன்மை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அப்புறப்படுத்தினர்.
The post திருவொற்றியூரில் வடிவேலு பாணியில் பூங்காவை காணவில்லை என பேனர் வைத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.