விபத்தில் ஒருவர் பலி டிரைவருக்கு ஓராண்டு சிறை

 

திருப்புத்தூரில், ஏப்.21: திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா செவத்தான்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (40). கடந்த 2015ம் ஆண்டு சிங்கம்புணரி பகுதிக்கு, இவர் உட்பட 6 பேர் கூலி வேலைக்கு வந்தனர். மல்லாக்கோட்டையில் கருவேலம் மரக்கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, சென்று கொண்டிருந்தனர். லாரியை டிரைவர் ராஜா(எ) புருஷோத்தமன் என்பவர் ஓட்டிச் சென்றார். மணிவேல் உட்பட 5 பேர் லாரியின் கேபினில் டிரைவர் அருகே அமர்ந்து சென்றனர். ஏரியூர் ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அனைவரும் காயமடைந்தனர். தலையில் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிவேல், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்புத்தூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் டிரைவர் ராஜா (எ) புருேஷாத்தமனுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

The post விபத்தில் ஒருவர் பலி டிரைவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: