ஊத்தங்கரை செருப்பு கடையில் துணிகர திருட்டு

ஊத்தங்கரை, ஏப்.18: ஊத்தங்கரை எம்ஜிஆர் நகரில் வேடியப்பன் என்பவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த ரூ.6000 மற்றும் விலை உயர்ந்த ஷூ மற்றும் காலணிகள் என மொத்தம் ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து வேடியப்பன் கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊத்தங்கரை செருப்பு கடையில் துணிகர திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: