டாக்டர் வீட்டில் பணத்துடன் 20 கிலோ வெள்ளி மாயம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், அண்ணா நகரைச் சேர்ந்தவர் டாக்டர் உதயகுமார் (55). பழநி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக உள்ளார். கடந்த14ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை கட்டிப்போட்டு 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் கத்தியால் வெட்டியதில் உதயகுமாரின் கைவிரல் நரம்பு அறுந்தது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்துடன் சுமார் 20 கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் காரில் தப்பியிருக்கலாமென தெரிய வந்துள்ளது. ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

The post டாக்டர் வீட்டில் பணத்துடன் 20 கிலோ வெள்ளி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: