ரூ.7.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை

பரமத்திவேலூர், ஏப்.12: கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜமீன் இளம்பள்ளி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் காலனி பகுதியில், 15வது நிதிக்குழு மமானியத்தில் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி தங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் வளர்மதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக ஊராட்சி செயலாளர் ராஜவேல் அனைவரையும் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கபிலர்மலை ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், பூமி பூஜை செய்து சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தளபதி சுந்தரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post ரூ.7.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை appeared first on Dinakaran.

Related Stories: