புதுக்கோட்டை ஆலங்குடி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்

ஆலங்குடி,ஏப்.12: ஆலங்குடி அருகே வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, கரிச்சான் மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை, புதுப்புட்டு குதிரை என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறும் மாட்டு வண்டிகளுக்கும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் முதல் பரிசாக ரூ.35 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை ஆலங்குடி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: