சென்னை: சேப்பாக்கம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், அந்த தங்கும் விடுதி அருகே நேற்று முன்தினம் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே அதிரடியாக தங்கும் விடுதிக்குள் புகுந்து போலீசார் சோதனை நடத்திய போது, அதில், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே பாலியல் தொழில் நடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post சேப்பாக்கத்தில் உள்ள விடுதியில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது: 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.
