திண்டுக்கல், ஏப். 10: திண்டுக்கல் என்ஜிஓ காலனி உழவர் சந்தை பகுதியில் திமுக ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர், திராட்சை, வெள்ளரி போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய குழுதலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பாலகிருஷ்ணாபுரம் முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, அணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாண்டித்துரை, அழகு பொன்னையா, வெங்கடேஷ், மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.The post திண்டுக்கல் உழவர் சந்தையில் கோடை கால நீர் மோர் பந்தல்: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.