சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெஸிகா

சார்ல்ஸ்டன்: கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா தகுதி பெற்றுள்ளார். 3வது சுற்றில் ருமேனியாவின் இரினா பெகுவுடன் (32 வயது, 37வது ரேங்க்) மோதிய பெகுலா(29 வயது, 3வது ரேங்க்) 7-5, 4-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி இரண்டரை மணி நேரத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிச் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 43 நிமிடத்துக்கு நீடித்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முன்னணி வீராங்கனைகள் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பவுலா படோசா (ஸ்பெயின்), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெஸிகா appeared first on Dinakaran.

Related Stories: