சாத்தூர், மார்ச் 28: ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சாத்தூர் முக்குராந்தலில் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோதி நிவாஸ், நகர் தலைவர் அய்யப்பன் மற்றும் சாத்தூர் நகர, வட்டார இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மக்கள் விரோத பாஜ அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.