திருப்பரங்குன்றம், மார்ச் 28: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இவ்விழாவில் யாகசாலை பூ, மண்டல பூஜை, கும்ப பூஜைகள் நடைபெற்றன. நேற்று சிவாச்சாரியார்களால் புனித நீர் கொண்டு வரப்பட்ட கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடானது. தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.