நிலக்கோட்டை, மார்ச் 28: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 10 புதிய கிளைகள் நேற்று நாடு முழுவதும் திறப்புவிழா கண்டன. இதில் 525வது கிளை நிலக்கோட்டையில் திறக்கப்பட்டது. இந்த கிளையை நிலக்கோட்டை தொழிலதிபர் சுசிதரன் திறந்துவைத்தார். புதிய ஏடிஎம் மையத்தை டாக்டர் அழகுராஜ் திறந்து வைத்தார். உமாசந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார். புதிய லாக்கர் பிரிவினை எஸ்.எஸ்.ராஜேந்திரன் துவக்கினார். கணினி பிரிவினை டாக்டர் சந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழாவில் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் கவுதமன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.