கார் புரோக்கரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

மதுரை: மதுரை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகாபுதீன்(33). கார் புரோக்கரான இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஆத்தீப் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அதை திருப்பிக்கொடுக்காத நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி இரவு சகாபுதீன் கடத்தப்பட்டார். ஆத்தீப்பின் நண்பர்கள் 6 பேர் அவரது கண்களை கட்டி, காரில் கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவரை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்தீப் (27), அப்துல் இம்ரான் (23), அகில் ஆசிக் (24), முகம்மது அனஸ் சபீக் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.  இந்நிலையில் வழக்கில் தலைமறைவான பாலாஜி அண்ணாமலை(22), வாசிம் அக்ரம்(23), கார்த்திக்(24) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: