அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு பெருங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச்

கந்தர்வகோட்டை: பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து டெஸ்க்- பெஞ்ச் எம்எல்ஏ வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் இருக்கும் அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருந்துவர் வை.முத்து ராஜாவின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவ - மாணவிகள் அமர்ந்து கல்வி கற்க இருக்கைகள் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி சாமிய்யா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி செல்வம், ஒன்றிய இணை செயலாளர் சரவணன் மற்றும் கட்சி பிரமுகர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பேசியபோது தமிழக அரசு கிராமப்புற மாணவ -மாணவிகள் கல்வி கற்க தனி கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.

Related Stories: