கூடலூர்: கூடலூர் நகராட்சியில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நேற்று எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி பஸ்டாண்ட் வளாகத்தில் புதிதாக 10 கடைகள், 15 பஸ் நிறுத்த இடங்கள், தாய்மார் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருப்பு அறை, ஓட்டுனர் நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, இருசக்கர வாகன காப்பகம் என நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு நிதி ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,