நாகர்கோவிலில் மார்ச் 28ல் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 26: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் , வரும்  28ம் தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை  28ம் தேதி  அன்று நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 28ம் தேதி அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.  கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: