கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் தைல மர காட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை சாலை, வட்டாட்சியர் அலுவலகம் அருகே கந்தர்வகோட்டையைச் சேர்ந்த ராமநாதன் மகன் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் தைல மரத்தோட்டம் தீ விபத்துக்குள்ளானது. இதேபோல் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் உள்ள நடராஜன் மகன் முருகையன் என்பவருக்கு சொந்தமான தைல மரத்தோட்டத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.