பழநி, மார்ச் 24: பழநி அருகே சத்திரப்பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது செய்யப்பட்டார். பழநி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (47). கே.வேலூரில் ரைஸ் மில் வைத்துள்ளார். இந்த ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை வாங்கி பட்டை தீட்டி விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.