கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக நீர் தினம், உலக வானிலை தினம் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசும்போது, உலக வானிலை நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளின் இன்றியமையாத பங்களிப்பை இது காட்டுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. காலநிலை அல்லது நீர் தொடர்பான பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன. நீரின் தேவைகள் குறித்தும், நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறிய போல நீர் நம் வாழ்வில் முக்கிய அங்கமாகும். மாணவர்கள் எவ்வாறு நீரினை பாதுகாக்க வேண்டும் என பேசினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்றார்.