மதுரை: மதுரையில் மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் தியாகராஜன், பட்டைய கணக்காளர் முகமதுகான் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. உணவு பொருள்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி உள்ளது. வரி வருவாய் உயரும்போது அனைத்துவித வரியும் குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை வருவாய் அதிகரித்த நிலையில் எந்தவித வரி குறைப்பு நடவடிக்கையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிதியாண்டில் இருந்து, எந்த ஒரு பொருளுக்கும் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்.