மதுரை: மதுரையில் மார்ச் 25ல் மதுரை வடக்கு - தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, சேடபட்டி மணிமாறன் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களது அறிக்கை; மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் திடலில் மதுரை வடக்கு - தெற்கு மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனையின்படி எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, பூத் கமிட்டி குறித்தும் திமுக ஆக்கப்பணிக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.