காரியாபட்டி, மார்ச் 21: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி புதிய கட்டிடம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை அங்கன்வாடி குழந்தைகள் பயன்பாட்டிற்காக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ் தலைமை வகித்தார்.