விருதுநகர், மார்ச் 21: விருதுநகரில் ரேஷன் அரிசி, பருப்பு கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரைட் மேரி தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது பர்மா காலனி பகுதியில் டூவீலரில் சென்ற பர்மா காலனியை சேர்ந்த சக்திவேல்(43) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.