விருதுநகர், மார்ச் 21: விபத்திற்கான நஷ்டஈடு வழங்காததால் கலெக்டரின் காரை அமீனா ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வாகனம் 2013ல் மோதிய விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் ரூ.28 லட்சம் கட்டப்பட்ட நிலையில், நிலுவைத் தொகை ரூ.37 லட்சம் கட்டப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டில் 2020ல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கலெக்டரின் கார் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.