அனுமதியின்றி சரளை மண் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல்

விராலிமலை: விராலிமலை தாலுகா தொட்டியப்பட்டி பகுதியில் அனுமதியின்றி சரளை மண் அள்ளப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி சரளல மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளரான புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துக்கண்ணு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார்தேடி வருகின்றனர்.

Related Stories: