மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை

தேனி, மார்ச் 21: தேனி அருகே தர்மாபுரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (52). இவரது மனைவி ஆண்டம்மாள் செல்வி. இவர்களது மகள் மதுபாலா. இவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் நடராஜன் வீட்டில் புலம்பியபடி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அரளி விதை தின்றுள்ளார். வீட்டில் வாந்தி எடுத்த அவரிடம் மனைவி விசாரித்துள்ளார். அப்போது அரளி விதையை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நடராஜன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நடராஜனின் மனைவி ஆண்டம்மாள் செல்வி அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: