ராமநாதபுரம், மார்ச் 21: ராமநாதபுரம் மாவட்ட சிவன் கோயில்களில் பங்குனி மாத சிறப்பு பிரதோச வழிபாடு நடந்தது. பங்குனி மாத பிரதோசத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தாழம்பூ சாற்றி பூஜைகள் நடந்தது. மாலையில் ரிஷப வாகன ஊர்வலம் கோயில் உள்பிரகாரத்தில் நடந்தது. இதுபோன்று ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசிவிஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர்,