தொண்டி, மார்ச் 21: தொண்டி அருகே எம்.வி.பட்டினம் அரசுப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வு எம்.வி.பட்டினம் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கதை பாட்டு விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக குழந்தைகள் வெளிப்படுத்துகின்ற றன்களை வெளிப்படுத்தும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதில் குழந்தைகளின் ஆடல்,பாடல், பேச்சு, நடிப்பு போன்ற தனித் திறன்கள் மற்றும் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டது.