வாசுதேவநல்லூர் அருகே ஜோதிலிங்கேஸ்வரசுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே ஜோதிலிங்கேஸ்வரசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக  நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர்  கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டி (எ) நாரணபுரத்தில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரசுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதைதொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ஜோதிலிங்கேஸ்வரர் விமானம் மற்றும் ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு மஹா அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 10 மணி முதல் ஒன்றிய கவுன்சிலர் அருணாதேவி சார்பில்அன்னதானம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, வாசு யூனியன் சேர்மன் பொன்.முத்தையாப் பாண்டியன்,  துணை தலைவர் சந்திரமோகன், திமுக மாவட்டதுணை செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசு பேரூர்  செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வம், சிற்பி செல்லப்பா ஆசாரி, சுந்தர், அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மூர்த்திப் பாண்டியன், கணேசன், நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் திருமேனிராஜ், உறுப்பினர் மாடசாமி, திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாப்பிள்ளைத் துரை, வாசுதேவநல்லூர் சக்தி சாய் பாபா ஆலய நிர்வாகி கார்மேக கண்ணன், செல்லத்துரை, துரைப்பாண்டி உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவனடியார்விஜயகுமார் செய்தார்.

Related Stories: