வேதாரண்யத்தில் முன்னாள் ராணுவத்தினர் ரத்ததான முகாம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அகில இந்திய முன்னாள் ராணுவ சங்கத்தினர் ரத்ததான முகாம் நடந்தது. வேதாரண்யம் தாலுகா பஞ்ச நதிக்குளம் கிழக்கில் அகில இந்திய முன்னாள் ராணுவ சங்கத்தினர் நாகை அரசு மருத்துவமனையும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். ரத்ததான முகாமை முன்னாள் ராணுவ நலச் சங்கத்தின் தலைவர் தமிழரசன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் காரியப்பன் வரவேற்றார். முகாமில் சமூக ஆர்வலர்கள் வீரமணி, பால்ராஜ், அண்ணாதுரை, இலக்குவன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 52 யூனிட் ரத்தம் தானமாக பெறபட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: